சமூக ஊடகங்களில் சட்டவிரோதமாக எரிபொருளை விநியோகிக்கும் வீடியோக்கள்: 3 எரிபொருள் தாங்கிகள் உரிமம் ரத்து!

Date:

சமூக ஊடகங்களில் சட்டவிரோதமாக எரிபொருளை விநியோகிக்கும் காணொளி காட்சிகள் பரப்பப்பட்டதையடுத்து, மூன்று எரிபொருள் பாரவூர்திகளின் உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த சம்பவங்கள் குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஐஓசி ஆகியவை விசாரணைகளை நடத்தி வருகின்றன எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட காட்சிகளில் எரிபொருள் போக்குவரத்து லொறிகள் சட்டவிரோதமாக எரிபொருளை இறக்குவதைக் காட்டியது.

இதேவேளை சட்டவிரோத செயற்பாடுகளை கவனத்திற்கு கொண்டு வந்த அனைவருக்கும் அமைச்சர் விஜேசேகர நன்றி தெரிவித்தார்.

Popular

More like this
Related

புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளியீடு!

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள்...

புத்தளம் தள வைத்தியசாலையில் புதிய வைத்திய அத்தியட்சகருக்கு வரவேற்பு நிகழ்வும் பதில் அத்தியட்சகரின் விடைபெறுதல் நிகழ்வும்

புத்தளம் தள வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராகப் (Medical Superintendent) பொறுப்பேற்றுள்ள...

சுரேஷ் சலேயின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

கொழும்பின் பல பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (03) முதல் 24 மணிநேரத்திற்கு நீர்...