நாளை முதல் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்:கெமுனு விஜேரத்ன

Date:

தனியார் பேருந்துகளின் சேவைகள் நாளை ஜூன் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அதேநேரம், எரிபொருள் நெருக்கடி காரணமாக இயங்கும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை 20,000 இலிருந்து 3000 ஆகக் குறைந்துள்ளதுடன், இலங்கைப் போக்குவரத்துச் சபையிடமிருந்து தனியார் பேருந்துகள் டீசலைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் பேருந்துகள் வழமையாக இயங்காது எனவும் கெமுனு உறுதியாகக் கூறினார்.

தனியார் பஸ்கள் இலங்கை போக்குவரத்து சபை பஸ் டிப்போக்களில் தாங்கிகளை நிரப்ப முடியும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்ததை அடுத்து பஸ்கள் வழமையாக இயங்கும் என கெமுனு உறுதியளித்துள்ளார்.

மேலும், தனியார் பேருந்துகளுக்கு மட்டும் 24 மணி நேர எரிபொருள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை தனியார் பேருந்துகளின் சேவைகள் நாளை வழமைக்கு திரும்பினாலும், மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...