‘அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது’:சாணக்கியன் புலம்பெயர் மக்களுடன் சந்திப்பு!

Date:

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந் நிலையில், அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய ஆலோசனைகளுக்கு செவிசாய்க்க மறுப்பதுடன், அக்கட்சியின் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

இன்று (20) காலை செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

‘நான் தற்போது சுவிட்சர்லாந்தில் பெர்னில் உள்ள புலம்பெயர் மக்களை சந்திக்கவுள்ளேன். இங்கு 60,000க்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழ் மக்கள் உள்ளனர். நான் உறுப்பினர்களுடன் கலந்துரையாடினேன், அது பயனுள்ளதாக இருந்தது.

இந்த நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர், புலம்பெயர்ந்தோர் இலங்கையை முன்னேற்றுவதற்கு எப்போதும் உறுதுணையாக இருந்தனர், கடந்த 70 ஆண்டுகளாக புலம்பெயர்ந்தோர் ஆதரவளிக்க ஆர்வமாக உள்ளனர்.

முதல் கட்டமாக, இலங்கையில் குடும்பத்தை ஆதரிக்கும் உறுப்பினர்களுக்கு அமெரிக்க டொலர் மற்றும் யூரோக்களில் பணத்தை அனுப்புவதைத் தொடருமாறு நான் பரிந்துரைத்தேன்.

மேலும் வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பும் நபர்கள், இலங்கை ரூபாயில் மாற்றும் தொகையில் அல்லாமல், வெளிநாட்டு நாணயத்தில் பயன்படுத்திய அதே தொகையை தொடர்ந்து அனுப்ப வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘புலம்பெயர்ந்தோருக்கு ஒரு முக்கிய அக்கறை இருந்தது, அதுதான் அரசியல் பாதுகாப்பு மற்றும் பொறுப்புக்கூறல். அவர்கள் நிதியை அனுப்பினால், பொறுப்பு இருக்கிறதா? இந்த நிதி நாட்டின் முன்னேற்றத்திற்குச் செல்லுமா? இவையே முக்கியக் கவலைகளாகக் கொண்டு வரப்பட்டன.

ஆனால் நீண்ட கால அடிப்படையில் நாடு பயன்பெறும் வகையில் வெளிநாட்டுப் பணம் அனுப்புவதை உறுப்பினர்களை ஊக்குவிக்க நான் முன்முயற்சி எடுத்தேன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கையின் முன்னேற்றத்திற்கு உதவ முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட முயற்சிகளுக்கு அரசாங்கத்தினால் மிகக் குறைந்தளவு அங்கீகாரம் அல்லது அவதானம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...