ஆகஸ்ட், டிசம்பரில் பாடசாலை விடுமுறைகள் குறைக்கப்படும்: மாணவர்கள் வருகை பற்றி அறிக்கை கோருகிறார் கல்வி அமைச்சர்

Date:

ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் உயர்தர ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஜூலை மாதம் இடம்பெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்களுக்கான திருத்த வகுப்புகள் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நடத்தப்படும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை பாடசாலைக் கல்வியை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் சனிக்கிழமை அறிவிக்கப்படும் எனவும் இவ்வாரம் பாடசாலை செயற்பாடுகளை ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை அடுத்த வாரத்திற்குள் வழமைக்கு கொண்டு வர முடிந்தால் பாடசாலை நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

நேற்றைய தினம் பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தந்தமை தொடர்பில் மாகாண மட்டத்தில் அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வதற்கு இன்று நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...