‘ஜனநாயகத்தில் தலையிடக் கூடாது’: ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக மௌனப் போராட்டம்!

Date:

‘ஜனநாயகத்தில் தலையிடக் கூடாது’ என வலியுறுத்தி கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக மௌனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத கைதுகள், கடத்தல்கள் மற்றும் மிரட்டல்களை உடனடியாக நிறுத்துங்கள், பேச்சு மற்றும் கருத்து உரிமைகளைப் பாதுகாக்கவும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த மௌனப் போராட்டம் இடம்பெற்றது.

இந்த போராட்டத்தின் போது, மனித உரிமைகளை எதிர்ப்பது ஜனநாயகத்தில் தலையிடாது, பல நாட்களாக வரிசையில் நிற்கும் மக்கள் மீதான பொலிஸாரின் அடக்குமுறையை நிறுத்துங்கள், அமைதியாக போராடுபவர்களை தொடாதீர்கள், இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் உன பல்வேறு கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்தனர்.

இதேவேளை, இந்த கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு கையளித்தனர்.

இதன்போது, கடிதத்தைப் பெற்றுக் கொண்ட கொழும்பில் உள்ள ஐ.நா. தூதுவர் செர்ஜி சிப்லோவ், இது குறித்து ஐ.நா தலைமையகத்திற்கு விளக்கமளிப்பதாக உறுதியளித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...