எரிபொருளை கோரி பஞ்சிகாவத்தை மக்கள் 2ஆவது நாளாக போராட்டம்: நாடு எதிர்பார்த்து காத்திருந்த பெட்ரோல் கப்பல் வந்தடைந்தது!

Date:

எரிபொருளை கோரி பஞ்சிகாவத்தை பிரதேச மக்கள் இரண்டாவது நாளாக இன்று (24) காலை வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல நாட்களாக பஞ்சிகாவத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் கிடைக்காததால் மக்கள் பல நாட்களாக வரிசையில் காத்திருக்கின்றனர்.

பஞ்சிகாவத்தை பிரதேச மக்கள் நேற்று (23) காலை எரிபொருளுக்காக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இன்று 40,000 மெட்ரிக் டன் பெற்றோல் கப்பல் இலங்கைக்கு வரும் என நம்பப்படுகிறது.

இந்த பெட்ரோல் கப்பல் பல நாட்களாக நாட்டில் வரிசைகளில் முக்கிய நம்பிக்கையாக உள்ளது. நேற்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல் கையிருப்பு விநியோகம் செய்யப்பட்ட போதிலும் சில பகுதிகளுக்கு இதுவரை பெற்றோல் கிடைக்கவில்லை.

பெறப்பட்ட குறைந்த அளவு பெற்றோல் கூட வரிசையில் நிற்கும் மக்களுக்கு போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுகாதார பிரிவினருக்கும் ஏனைய வாகனங்களுக்கும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இன்று காலை களுபோவில வைத்தியசாலைக்கு முன்பாகவும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...