விவசாயத்துறை அமைச்சின் அனைத்து ஊழியர்களின் விடுமுறை ரத்து!

Date:

யூரியா உர விநியோகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய அமைச்சின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் ஜூலை 06 ஆம் திகதி முதல் இடைநிறுத்துவதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.

இந்திய அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 65,000 மெற்றிக் தொன் யூரியா உரக் கப்பல் ஜூலை 06ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.

கையிருப்பில் உள்ள உரங்களை விவசாய மக்களுக்கு விநியோகிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (24) விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹன புஷ்குமாரவிடம் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், யூரியா உரம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ள கமநல அபிவிருத்தி நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...