எரிபொருள் நெருக்கடியால் எம்.பி.க்கள், அமைச்சர்களின் உத்தியோகபூர்வ பயணங்கள் ரத்து!

Date:

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அமைச்சர்களின் பல உத்தியோகபூர்வ பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கடந்த 25ஆம் திகதி காலி துறைமுகத்திற்கு ஆய்வு விஜயமொன்றை மேற்கொள்ளவிருந்த நிலையில் எரிபொருள் பிரச்சினை காரணமாக அது இரத்துச் செய்யப்பட்டதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலம், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் பலாலி விமான நிலையத்தை பார்வையிடுவதற்காக ரயிலில் யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக உத்தியோகபூர்வ வாகனத்தை தயார் செய்யாமல் ரயிலில் இருந்து இறங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்திருந்ததுடன் அதற்கேற்ப ரயில் பயணமும் திட்டமிடப்பட்டது.

அத்துடன் எரிபொருள் நெருக்கடி காரணமாக அமைச்சர் நிமல் சிறிபால யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை துறைமுகம் வரை சென்று அங்கிருந்து சிறிய வேன் ஒன்றில் கொழும்பு நோக்கி பயணித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருள் நெருக்கடி காரணமாக மேலும் சில அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ வாகனங்களுக்குப் பதிலாக சிறிய வாகனங்களைப் பயன்படுத்துவதாகத் தெரியவருகிறது.

பல அமைச்சுக்களில் வாகனப் பாவனை 70 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...