‘ஒரே நாடு-ஒரே சட்டம்’ செயலணியின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Date:

(File Photo)

‘ஒரு நாடு – ஒரே சட்டம்’ தொடர்பில் செயற்படும் ஜனாதிபதி செயலணியினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.

அதற்கமைய இந்த அறிக்கை ஜூன் 17 ஆம் திகதி இறுதி செய்யப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுவதற்கு முன்னர் அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களால் மறுபரிசீலனை செய்யப்பட்டதாக செயலணியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தார்.

இதன்படி, செயலணித் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் ஏனைய உறுப்பினர்களினால் அறிக்கை கையொப்பமிடப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய பொது மக்கள் மற்றும் நிபுணர்கள் குழுவின் கருத்துக்களைக் கேட்டறிந்து செயல்திட்டத்தைத் தொடர்ந்து செயலணியின் அறிக்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...