100,000 மெட்ரிக் தொன் எரிவாயு கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்து!

Date:

நிதி அமைச்சின் கீழ் இயங்கும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் 100,000 மெற்றிக் தொன் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் இன்று (30) கைச்சாத்திட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய எரிவாயுவின் மொத்த விலை 90 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். உலக வங்கி 70 மில்லியன் டொலர் நிதியுதவி அளித்துள்ளதுடன்.

மீதமுள்ள 20 மில்லியன் டொலர்களை லிட்ரோ நிறுவனம் வழங்கியுள்ளதாகவும், இந்த கையிருப்பு நான்கு மாதங்களுக்கு நாட்டுக்கு எரிவாயு வழங்க போதுமானதாக இருக்கும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த எரிவாயுவில் 70வீத உள்நாட்டு நுகர்வோருக்கு வழங்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 5 மில்லியன் 12.5 சிலிண்டர் சிலிண்டர்கள், 1 மில்லியன் 5 சிலிண்டர் சிலிண்டர்கள் மற்றும் 1 மில்லியன் 2.5 சிலிண்டர்கள், மீதமுள்ள 30 வீத வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை இந்த ஒப்பந்தத்தின் கீழ் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் லிட்ரோ நிறுவனத்தால் பெறப்பட்ட 33,000 தொன் எல்.பி.ஜி எரிவாயு ஜூலை முதல் வாரத்தில் இலங்கை வந்தடையும் எனவும் விநியோகம் உடனடியாக ஆரம்பிக்கப்படும் எனவும் பிரதமர் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...