எரிபொருள் இல்லாமல் ஆம்புலன்ஸ்கள் சேவைகள் பாதிப்பு: எதிர்காலத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம்!

Date:

ஆம்புலன்ஸ், மருந்துகளை ஏற்றிச்செல்லும் வாகனம், ஜெனரேட்டர் போன்றவற்றுக்கு தேவையான எரிபொருளை பல மருத்துவமனைகளில் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஆம்புலன்ஸுகளுக்கு எரிபொருள் நிரப்பாவிட்டால், ஆபத்தான நோயாளிகளை மருத்துவமனைகளில் இருந்து வசதிகளுக்கு கொண்டு செல்ல முடியாது என்றும், அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் ஜெனரேட்டர்களுக்கு எரிபொருள் இல்லாமல் இருந்தால், எதிர்காலத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், நாட்டில் மருந்துகள் அல்லது மருத்துவமனைகள் விநியோகம் செய்வதில் தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர், 15 நோயாளர் காவு வண்டிகளில் போதியளவு எரிபொருள்  இல்லை என தெரிவித்தார்.

இரண்டு மருந்து ஏற்றுச்செல்லும் லொறிகள், நான்கு கெப் வண்டிகள் மற்றும் ஒரு வேன் எரிபொருளின்றி நிறுத்தப்பட்டிருந்ததாகவும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.

நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளிலும் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் பிரச்சினை மற்றும் பணியாளர்கள் பணிக்கு வர முடியாத நிலை காரணமாக தனியார் அம்புலன்ஸ் சேவைகளும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...