ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் : பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பேராயர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு!

Date:

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு காரணமான பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கர்தினால் மல்கம் ரஞ்சித் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இவ்வாறான ரிட் உத்தரவுகளை பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த மனுவில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.கே. ஹெட்டியாராச்சி, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் சமிந்த நவரத்ன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் குறைந்தது 271 பேர் கொல்லப்பட்டனர். மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஆராய்வதற்காக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவை நியமித்ததாக கர்தினால் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை 2021 ஜனவரி 31ஆம் திகதி தற்போதைய ஜனாதிபதியிடம் சமர்ப்பித்ததாக அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளின்படி, புலனாய்வுத் துறை, காவல்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் அலட்சியத்தால் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதற்குக் காரணமான உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தாக்குதலைத் தடுக்கத் தவறிய மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவிற்கு எதிராக பிரதிவாதிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கர்தினால் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் காரணமாக தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு ரிட் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர் கோரியுள்ளார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...