எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாட சவூதி அரேபியாவிற்கு செல்லும் விசேட தூதுவர்!

Date:

(File Photo)

இரு நாடுகளுடனான எரிசக்தி ஒத்துழைப்புக்கான வழிவகைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சவூதி அரேபியாவிற்கு விசேட தூதுவரை அனுப்பவுள்ளார்.

அதற்கமைய சுற்றாடல் துறை அமைச்சர் நசீர் அஹமட் ஜூலை 02 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்த விஜயத்தின் விபரம் தொடர்பாக ஏ.ஐ. சவூதி அரேபியாவின் தூதரகத்தின் அப்துல்லாஹ் ஏ.ஏ.ஓர்கோபி, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை வெளிவிவகார அமைச்சில் சந்தித்தார்.

இந்தச்சந்திப்பில், வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், தற்போதைய பொருளாதார நிலை, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் இலங்கையின் அனைத்து துறைகளிலும் எள்ள அதன் எதிர்மறையான தாக்கம் உள்ளிட்டவை குறித்து விளக்கினார்.

மேலும், சவூதி அரேபிய இராச்சியத்துடன் ஆற்றல் ஒத்துழைப்புக்கான வழிகளை மிகவும் அவசரமான விடயமாகத் தேடியதுடன் இலங்கையின் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் 2022 ஜூலை 02 – 05 வரை சவூதி அரேபியாவிற்கு ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவராக விஜயம் செய்வதற்கு வசதியாக இருந்தார்.

இதேவேளை  சவூதி தூதரகத்தின் ஓர்கோபி, இலங்கை – சவூதி இருதரப்பு உறவுக்கு இணைக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், இத்தருணத்தில் இலங்கைக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் தருவதாக உறுதியளித்தார்.

Popular

More like this
Related

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...