கடவுச்சீட்டு பெற வரிசையில் நிற்கும் போது கர்ப்பிணி பெண்ணொருவருக்கு பிரசவ வலி!

Date:

கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் வெளிநாட்டு கடவுச்சீட்டை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த 26 வயதுடைய  கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென பிரசவ அறிகுறிகள் தோன்றியது.

இதனையடுத்து இராணுவம் தலையிட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்ததையடுத்து அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

ஹட்டன் பிரதேசத்தில் இருந்து கொழும்பு வந்த இளம் தம்பதியொன்று வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக சுமார் இரண்டு நாட்களாக குடிவரவு வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பெண் கர்ப்பமாக இருந்ததாகவும், இன்று காலை 7.40 மணியளவில் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கழிவறைக்கு சென்று மலசல கூடத்தை பயன்படுத்திய போது, ​​அவருக்கு திடீரென பிரசவ அறிகுறிகள் இருப்பதாக அருகில் உள்ள பெண்களுக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, அந்த இடத்தில் கடமையில் இருந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் பெண் உத்தியோகத்தர்கள் உடனடியாக தலையிட்டு கர்ப்பிணிப் பெண்ணை இராணுவ வாகனத்தில் பொரளை காசல் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று ஒப்படைத்ததாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில், அவர் வழியில் ஒரு பெண் குழந்தையைப் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

தாயும் குழந்தையும் மகளும் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...