போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்!

Date:

உலக வர்த்தக மையத்திற்கு அருகில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.

நாளைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களனி பல்கலைக்கழகத்தில் இருந்து இன்று மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியிருந்தனர்.

இவர்கள் கொழும்பு கோட்டை பகுதியில் உலக வர்த்தக மைய கட்டடத்தொகுதிக்கு அருகில் உள்ள வீதித் தடையை உடைத்துக்கொண்டு முன்னால் செல்ல முயன்ற போது அவர்கள் மீது நீர்த்தாரை தாக்குதல் மற்றும் கண்ணீர் புகைத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளதால் பதற்றநிலைமை உருவாகியுள்ளது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...