ஜனாதிபதியை பதவி விலகுமாறு பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!

Date:

அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாக பதவி விலகுமாறு கோரியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 16 எம்.பி.க்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத முதிர்ந்த தலைவருக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியுள்ளனர்.

மேலும், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தெளிவான பாராளுமன்ற பெரும்பான்மையை வெல்லக்கூடிய தலைவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் டலஸ் அழகப்பெரும, சன்ன ஜயசுமன மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் அடங்குவர்.

இதையடுத்து ஜனாதிபதி அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதன் பின் அலுவலகத்தை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...