16 நாட்களிலேயே தனது பதவியை இராஜினாமா செய்தார் தம்மிக்க பெரேரா!

Date:

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவியேற்று 16 நாட்களிலேயே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா அண்மையில் தேசியப்பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு வந்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் கடந்த 22ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதையடுத்து, அந்த வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

பின்னர் ஜூன் 24 ஆம் திகதி பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்கால முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அதன்படி 16 நாட்கள் அந்த அமைச்சர் பதவியில் பணியாற்றினார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...