புதிய அரசாங்கம் அமையும் வரை போராட்டம் தொடர வேண்டும்: ஜே.வி.பி

Date:

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகிய பின்னரும் போராட்டத்தை கைவிடக் கூடாது என்று கூறியுள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது.
அதேநேரம், புதிய அரசாணையுடன் புதிய ஆட்சி அமைக்கும் வரை போராட்டத்தை தொடர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா செய்தியாளர் மாநாட்டில் பேசுகையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டத்தின் நோக்கம் ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி நீக்கம் செய்வது மாத்திரமல்ல, 74 ஆண்டுகால தோல்வியடைந்த பொருளாதாரத்தை மாற்றியமைத்து முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

தற்போதைய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடிக்கு ஜனாதிபதி பதவி விலகிய பின்னரும் தீர்வு கிடைக்காது என தெரிவித்த அவர், இந்த நெருக்கடி நிலையை தீர்க்க புதிய அரசாணையுடன் கூடிய புதிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.

‘சில தரப்பினர் நிலைமையை சாதகமாகப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கின்றனர். தற்போதைய நாடாளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரை நியமித்து நாட்டை ஆள முயற்சிக்கின்றனர்.

இதுபோன்ற தந்திரங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறோம். எம்மால் சாதிக்க முடியும்.

புதிய அரசாங்கத்தை அமைத்த பின்னரே இறுதி வெற்றி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்போதும் பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் தற்போதைய பாராளுமன்றத்தின் மூலம் எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

நாம் ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும். குறுகிய கால அவகாசம் மற்றும் அதன் முதல் பணி தேர்தலை நடத்துவதாக இருக்க வேண்டும் என்றார்.

Popular

More like this
Related

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணி...

வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது!

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை, மறு அறிவிப்பு வரும்...

மன்னார், இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பாதிக்கப்பட்ட 157 பேரை கடற்படையினர் மீட்டனர்

மன்னாரின் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட...

GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை...