அலரிமாளிகையில் இரு குழுக்களிடையே மோதல்: 10 போராட்டக்காரர்கள் காயம்

Date:

கொழும்பு அலரி மாளிகையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தினால் காயமடைந்த பெண் ஒருவரின் தொண்டையும் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரு குழுக்களுக்கிடையில் மோதல் வெடித்ததைத் தொடர்ந்து 10 போராட்டக்காரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து காயமடைந்த இரு போராட்டக்காரர்கள் சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 09 ஆம் திகதி நடைபெற்ற பொது மக்கள் எழுச்சியின் போது அரச எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் அலரிமாளிகையை ஆக்கிரமித்துள்ளனர்.

கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம், காலி முகத்திடலுக்கு அருகிலுள்ள ஜனாதிபதி செயலகம் மற்றும் கொழும்பில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆக்கிரமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...