ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விமானப்படை உறுதிப்படுத்தியது: ‘கோட்டாபயவுக்கு புகலிடம் வழங்கக்கூடாது’

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பாரியளவில் எதிர்ப்புக்கள் கிளம்பிய நிலையில், இன்று புதன்கிழமை அதிகாலை தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் மாலைத்தீவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

புதன்கிழமை அதிகாலை 3.07 மணியளவில் மாலைத்தீவில் உள்ள வெலேனா சர்வதேச விமான நிலையத்தில் ராஜபக்ஷ வந்திறங்கினார், அந்த நேரத்தில் மாலத்தீவு தலைநகர் பலத்த பாதுகாப்பில் இருந்ததாக ஆதாரங்கள் ஆங்கில ஊடகமான்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளன.

ராஜபக்சக்களை மாலைதீவில் தரையிறக்குமாறு ஜனாதிபதி மொஹமட் நஷீத் ஜனாதிபதி இப்ராஹிம் சோலியிடம் கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கையின் அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் முழு ஒப்புதலுக்கு உட்பட்டு, குடிவரவு, சுங்கம் மற்றும் பிற சட்டங்களுக்கு உட்பட்டு இந்த விமானம் வழங்கப்பட்டுள்ளது.

விமானப்படைக்கு சொந்தமான அன்டோனோவ் 32 ரக விமானம் மூலம் ஜனாதிபதியின் குழு மாலைதீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மாலைதீவில் கோட்டாபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது என மாலைதீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...