ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விமானப்படை உறுதிப்படுத்தியது: ‘கோட்டாபயவுக்கு புகலிடம் வழங்கக்கூடாது’

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பாரியளவில் எதிர்ப்புக்கள் கிளம்பிய நிலையில், இன்று புதன்கிழமை அதிகாலை தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் மாலைத்தீவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

புதன்கிழமை அதிகாலை 3.07 மணியளவில் மாலைத்தீவில் உள்ள வெலேனா சர்வதேச விமான நிலையத்தில் ராஜபக்ஷ வந்திறங்கினார், அந்த நேரத்தில் மாலத்தீவு தலைநகர் பலத்த பாதுகாப்பில் இருந்ததாக ஆதாரங்கள் ஆங்கில ஊடகமான்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளன.

ராஜபக்சக்களை மாலைதீவில் தரையிறக்குமாறு ஜனாதிபதி மொஹமட் நஷீத் ஜனாதிபதி இப்ராஹிம் சோலியிடம் கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கையின் அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் முழு ஒப்புதலுக்கு உட்பட்டு, குடிவரவு, சுங்கம் மற்றும் பிற சட்டங்களுக்கு உட்பட்டு இந்த விமானம் வழங்கப்பட்டுள்ளது.

விமானப்படைக்கு சொந்தமான அன்டோனோவ் 32 ரக விமானம் மூலம் ஜனாதிபதியின் குழு மாலைதீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மாலைதீவில் கோட்டாபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது என மாலைதீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...