மாலைத்தீவில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாலைத்தீவில் வசிக்கும் இலங்கையர்கள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, மாலைத்தீவின் தலைநகரான மாலேயில் இலங்கையர்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை தேசியக் கொடியை ஏந்தியவாறும், அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காணப்படுகின்றனர்.

மேலும், தற்போது மாலைத்தீவில் உள்ள உல்லாச விடுதியில் இருக்கும் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகலை இன்று அறிவிப்பதாக தெரிவித்திருந்த போதிலும், இன்று அதிகாலை தனது குடும்பத்தினருடன் மாலைதீவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதேவேளை மாலைதீவு ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மாலைதீவு அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  இலங்கை பிரஜைகளை பொலிஸார் கலைத்துள்ளனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...