‘நாட்டில் அமைதியை நிலை நாட்ட ஒத்துழைப்பு தாருங்கள்’: சவேந்திர சில்வா விசேட அறிக்கை

Date:

நாட்டில் அமைதியை நிலை நாட்ட பொலிஸால் மற்றும் ஆயுதப்படையினருக்கு ஆதரவளிக்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போ, அரசாங்க மற்றும் தனியார் சொத்துக்களை அழிக்கக்கூடாது. கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டி அரசியல் தீர்மானங்கள் தொடர்பில் முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கும் அறிவிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதப் படைகளும் பொலிஸ்துறையும் தற்போதுள்ள அரசியலமைப்பின் படியே செயற்பட்டன. குறிப்பாக இன்று சபாநாயகர் எங்களிடம் கூறினார்.

ஜனாதிபதியின் பதவி விலகல் இன்று இடம்பெறும் என அவர் எமக்கு உறுதிப்படுத்தினார்.

ஜனாதிபதி பதவி விலகிய நிலையில், வருங்கால ஜனாதிபதியை நியமிக்கும் வரையான காலப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவருடன் கலந்துரையாடினோம் எனவும் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...