‘பதில் ஜனாதிபதியின் உத்தரவை பின்பற்ற வேண்டாம்’: சரத் பொன்சேகா வேண்டுகோள்

Date:

சட்ட விரோதமான முறையில் ஜனாதிபதி அதிகாரத்தைப் பெற்று, பதில் ஜனாதிபதியாக தம்மை அறிமுகப்படுத்திய ரணில் விக்ரமசிங்கவின் சட்ட விரோதமான மற்றும் அரசியலமைப்புக்கு முரணான கட்டளைகளை பின்பற்றுவதைத் தவிர்க்குமாறு ஆயுதப்படையினரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் தனது முகநூல் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் துப்பாக்கிச்சூடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மக்களிடையே வதந்தி பரவி வருவதாகவும், ஆயுதப்படையினருக்கும், நாட்டின் சாதாரண நிராயுதபாணியான பொதுமக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தை மதிக்கும் மற்றும் ஒழுக்கமான இராணுவம் என்ற வகையில், சாதாரண பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதைத் தவிர்த்து, ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக ஆயுதங்களை உயர்த்துங்கள் என்று மீண்டும் வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தருணத்தில் தானும் போராட்ட களத்தில் நின்று மக்களுடன் முன்னணியில் நின்று மக்கள் போராட்ட வெற்றிக்காக தன்னை அர்ப்பணிப்பதாக அவர் தனது குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...