‘பதில் ஜனாதிபதியின் உத்தரவை பின்பற்ற வேண்டாம்’: சரத் பொன்சேகா வேண்டுகோள்

Date:

சட்ட விரோதமான முறையில் ஜனாதிபதி அதிகாரத்தைப் பெற்று, பதில் ஜனாதிபதியாக தம்மை அறிமுகப்படுத்திய ரணில் விக்ரமசிங்கவின் சட்ட விரோதமான மற்றும் அரசியலமைப்புக்கு முரணான கட்டளைகளை பின்பற்றுவதைத் தவிர்க்குமாறு ஆயுதப்படையினரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் தனது முகநூல் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் துப்பாக்கிச்சூடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மக்களிடையே வதந்தி பரவி வருவதாகவும், ஆயுதப்படையினருக்கும், நாட்டின் சாதாரண நிராயுதபாணியான பொதுமக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தை மதிக்கும் மற்றும் ஒழுக்கமான இராணுவம் என்ற வகையில், சாதாரண பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதைத் தவிர்த்து, ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக ஆயுதங்களை உயர்த்துங்கள் என்று மீண்டும் வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தருணத்தில் தானும் போராட்ட களத்தில் நின்று மக்களுடன் முன்னணியில் நின்று மக்கள் போராட்ட வெற்றிக்காக தன்னை அர்ப்பணிப்பதாக அவர் தனது குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...