கோட்டா-ரணில் பதவி விலகும் வரை நாடு தழுவிய வேலை நிறுத்தம், ஹர்த்தால்!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலகும் வரையில் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் ஹர்த்தால்களை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த சில நாட்களில் நாடு முழுவதிலும் உள்ள அரச மற்றும் தனியார் துறை பணியிடங்களில் இந்த தொழில்சார் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் சிரேஷ்ட உப தலைவர்  அனுப நந்துல தெரிவித்தார்.

தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலக வேண்டும் என்ற மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்கத் தயாரில்லை என்றால் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் இன்னும் பொதுமக்களால் கடும் வெறுப்புக்கு ஆளாகியுள்ளதால், தொழிற்சங்க நடவடிக்கை வரை இதனை இழுத்தடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாகவும்  நந்துல தெரிவித்தார்.

ஏப்ரல் 28 மற்றும் மே 6 ஆம் திகதிகளில் அமுல்படுத்தப்பட்ட ஹர்த்தால், வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களை விடவும் மேம்பட்ட தொழில்சார் நடவடிக்கைகள் இம்முறை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...