‘ஜனாதிபதி கோட்டாபய அடுத்த சில நாட்களுக்கு சிங்கப்பூரில் தங்கியிருப்பார்’

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வருகையை சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அதேநேரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு மேலும் தெளிவுபடுத்தியது, ஜனாதிபதி எந்த தஞ்சமும் கேட்கவில்லை மற்றும் வழங்கப்படவில்லை.

அதேவேளை ‘சிங்கப்பூர் பொதுவாக புகலிடக் கோரிக்கைகளை வழங்குவதில்லை என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் மேலும் கூறியது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூரில் புகலிடம் வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் அரசாங்கம் அறிக்கை ஒன்றில் உறுதி செய்துள்ளது.

மேலும் தனிப்பட்ட பயணத்தின் அடிப்படையில் ஜனாதிபதி சிங்கப்பூர் வந்துள்ளார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

“ஜனாதிபதி அடுத்த சில நாட்களுக்கு சிங்கப்பூரில் தங்கியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என சிங்கப்பூர் அரசாங்கம் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியள்ளது.

மக்கள் எழுச்சி மற்றும் பதவி விலகல் கோரிக்கையையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தனது இராஜினாமாவை வழங்குவதாக அறிவித்திருந்த போதிலும் மாலைதீவுக்கு தப்பிச் சென்றார்.

அவர் இன்னும் இராஜினாமா கடிதத்தை ஒப்படைக்கவில்லை என்றாலும், ஜனாதிபதி இன்று சவூதி ஏர்லைன்ஸ் விமானத்தில் சிங்கப்பூர் சென்றார்.

Popular

More like this
Related

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை...

நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள்...

பல்துறை அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைந்தார்.!

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய...

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...