‘ஜனாதிபதி கோட்டாபய அடுத்த சில நாட்களுக்கு சிங்கப்பூரில் தங்கியிருப்பார்’

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வருகையை சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அதேநேரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு மேலும் தெளிவுபடுத்தியது, ஜனாதிபதி எந்த தஞ்சமும் கேட்கவில்லை மற்றும் வழங்கப்படவில்லை.

அதேவேளை ‘சிங்கப்பூர் பொதுவாக புகலிடக் கோரிக்கைகளை வழங்குவதில்லை என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் மேலும் கூறியது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூரில் புகலிடம் வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் அரசாங்கம் அறிக்கை ஒன்றில் உறுதி செய்துள்ளது.

மேலும் தனிப்பட்ட பயணத்தின் அடிப்படையில் ஜனாதிபதி சிங்கப்பூர் வந்துள்ளார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

“ஜனாதிபதி அடுத்த சில நாட்களுக்கு சிங்கப்பூரில் தங்கியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என சிங்கப்பூர் அரசாங்கம் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியள்ளது.

மக்கள் எழுச்சி மற்றும் பதவி விலகல் கோரிக்கையையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தனது இராஜினாமாவை வழங்குவதாக அறிவித்திருந்த போதிலும் மாலைதீவுக்கு தப்பிச் சென்றார்.

அவர் இன்னும் இராஜினாமா கடிதத்தை ஒப்படைக்கவில்லை என்றாலும், ஜனாதிபதி இன்று சவூதி ஏர்லைன்ஸ் விமானத்தில் சிங்கப்பூர் சென்றார்.

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...