ஏழு நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தெரிவு :சபாநாயகர்

Date:

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இராஜினாமாவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்தார்.

நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது,

​​ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக தனது இராஜினாமாவை சமர்ப்பித்துள்ளதாகவும், எனவே அரசியலமைப்பின் பிரகாரம், பாராளுமன்றத்தில் இருந்து ஜனாதிபதியொருவர் தெரிவு செய்யப்படும் வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக செயற்படுவார் எனவும் தெரிவித்தார்.

மேலும், 1981 ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் இலக்கம் 02 மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 40 வது சரத்தின் படி, சுமூகமான அதிகார மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கான விசேட நடவடிக்கைகள் இயற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சட்டமியற்றுபவர்கள் தமது ஜனநாயக உரிமைகளை அமைதியான முறையில் பயன்படுத்த அனுமதிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏழு நாட்களுக்குள் நடைமுறையை முடிக்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

புதிய ஜனாதிபதியை நியமிக்கும் பணிகளுக்காக நாளை பாராளுமன்றம் கூடும் என சபாநாயகர்  தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை அமுல்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் சுதந்திரமாக மனசாட்சிக்கு அமைய செயற்படும் வகையில் அமைதியான சூழலை ஏற்படுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் செயற்பாடுகள் அனைத்து பொறுப்பு வாய்ந்த கட்சிகளின் பங்களிப்புடன் ஏழு நாட்களுக்குள் குறுகிய காலத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பொதுமக்களைப் பீதியடையச் செய்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான...

புத்தளத்தில் நிவாரணப் பணிக்கான மையமொன்றினை நிறுவ ஏன் தாமதம்?

நாட்டின் பல பகுதிகளில் சமீபத்திய புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணி...

வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது!

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை, மறு அறிவிப்பு வரும்...