ஏழு நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தெரிவு :சபாநாயகர்

Date:

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இராஜினாமாவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்தார்.

நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது,

​​ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக தனது இராஜினாமாவை சமர்ப்பித்துள்ளதாகவும், எனவே அரசியலமைப்பின் பிரகாரம், பாராளுமன்றத்தில் இருந்து ஜனாதிபதியொருவர் தெரிவு செய்யப்படும் வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக செயற்படுவார் எனவும் தெரிவித்தார்.

மேலும், 1981 ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் இலக்கம் 02 மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 40 வது சரத்தின் படி, சுமூகமான அதிகார மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கான விசேட நடவடிக்கைகள் இயற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சட்டமியற்றுபவர்கள் தமது ஜனநாயக உரிமைகளை அமைதியான முறையில் பயன்படுத்த அனுமதிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏழு நாட்களுக்குள் நடைமுறையை முடிக்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

புதிய ஜனாதிபதியை நியமிக்கும் பணிகளுக்காக நாளை பாராளுமன்றம் கூடும் என சபாநாயகர்  தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை அமுல்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் சுதந்திரமாக மனசாட்சிக்கு அமைய செயற்படும் வகையில் அமைதியான சூழலை ஏற்படுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் செயற்பாடுகள் அனைத்து பொறுப்பு வாய்ந்த கட்சிகளின் பங்களிப்புடன் ஏழு நாட்களுக்குள் குறுகிய காலத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...