தேசிய எரிபொருள் உரிமம்: வணிக நிறுவனங்கள் வாகனங்களை பதிவு செய்யலாம்!

Date:

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் ஊடாக பல வாகனங்களைக் கொண்ட வர்த்தக நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிர்வரும் சில தினங்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

வர்த்தகப் பதிவு எண்ணைப் பயன்படுத்தி இந்த உரிமத்தைப் பெறுவதற்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அங்கு பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு வாகனத்திற்கும் குறிப்பிட்ட QR குறியீடு வழங்கப்படும் என அவரது ட்விட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கும் வகையில் தேசிய எரிபொருள் உரிமம் அடுத்த சில நாட்களில் மேம்படுத்தப்படும்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...