இரகசிய வாக்குப்பதிவு ஆரம்பம்: சபாநாயகர் முதல் வாக்கை பதிவு செய்தார்!

Date:

இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் இன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

வாக்குச் சீட்டு இரகசிய வாக்கெடுப்பு என்பதால் அதனை காட்சிப்படுத்துவது அல்லது புகைப்படம் எடுப்பது குற்றமாகும் என்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் பிரிவு மணியை பாரம்பரியமாக ஐந்து நிமிடம் அடித்த பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்குப்பதிவு தொடங்கும் முன் காலியான வாக்கு பெட்டி எம்.பி.க்களுக்கு காண்பிக்கப்பட்டது.   வாக்குப்பெட்டிகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...