‘ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல, நான் மக்களின் நண்பன்’: ஜனாதிபதி ரணில்

Date:

நான் ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல, நான் மக்களின் நண்பன், என்று இலங்கையின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘ஸ்கை’ நியூஸ்’ என்ற ஊடகமொன்று ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் குடும்பத்தின் பழைய நண்பர் எனக் கூறியதை ரணில் ரணில் கேலி செய்துள்ளார்.

‘ஸ்கை நியூஸ்’ ஊடகவியலாளர் விக்கிரமசிங்கவை ராஜபக்ஷவின் பழைய நண்பர் என்று குறிப்பிட்டபோது, அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, தான் எப்போதும் ராஜபக்ஷக்களை எதிர்ப்பதாக குறிப்பிட்டார்.

மேலும், எந்தவொரு நபரையும் நேர்காணல் செய்வதற்கு முன்னர் ஆழமான விசாரணையை மேற்கொள்ளுமாறும் ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

மற்றுமொரு கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, மக்கள் கோரிய மாற்றத்தை வழங்குவதாக தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...