தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்?

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள்  ஆங்கில ஊடகமொன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளன.

தம்மிக்க பெரேரா தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளருக்கு அனுப்பியுள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இராஜினாமாவால் காலியான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நியமிக்கப்பட்ட தம்மிக்க பெரேரா கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பின்னர் அவர் ஜூன் 24 அன்று முதலீட்டு ஊக்குவிப்பு  அமைச்சராக பதவியேற்றார். மற்றும் சில நாட்களுக்குப் பிறகு ஜூலை 10 ஆம்  திகதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...