கோட்டா கோ கம தாக்குதல்: 14 பேர் மருத்துவமனையில்

Date:

கொழும்பு, காலி முகத்திடலில் நேற்று பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் பெண் ஒருவர் உட்பட 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சான்றுகள் மற்றும் கைரேகைகளை சேகரிப்பதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இலங்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்திய பின்னர், அந்நகரில் உள்ள ஜனாதிபதி செயலகத்தை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இராணுவம் அருகிலுள்ள கோட்டா கோ கம போராட்ட தளத்தில் கூடாரங்களை இடித்து, ஏராளமான போராட்டத் தலைவர்களை தடுத்து வைத்தது மற்றும் அப்பகுதியைத் தடுத்தது.

இந்த நிலையில், ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை இன்று ஜூலை 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...