‘போராட்டத்தை கலைக்க அதிகாரம் இருந்தும் கோட்டாபய அவ்வாறு செய்யவில்லை’:ஓமல்பே சோபித தேரர்

Date:

காலி முகத்திடல் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் வெறுக்கத்தக்கது மற்றும் கொடூரமானது என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு போராட்டத்தை கட்டுப்படுத்தும் திறன் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இருந்ததாகவும் ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து 24 மணித்தியாலங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இதுவரை சரியான சர்வதேச அங்கீகாரம் கிடைக்கவில்லை.

மக்கள் போராட்டங்களை ஆயுத பலத்தால் ஒடுக்குவதற்கு இடமளிக்க வேண்டாம் என அண்மையில் சர்வதேச சமூகம் அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தது.

அரசுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இவ்வாறான நிலையில், ஆயுதம் ஏந்தாமல் ஜனநாயகக் கோரிக்கைகளை முன்வைக்கும் போராட்டக்காரர்கள் மீது நள்ளிரவில் ஆயுதப் படைகள் பயங்கரவாதக் குழுவின் பாணியில் தாக்குதல் நடத்துவது வெட்கக்கேடானது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கும் இவ்வாறே மக்கள் போராட்டத்தை அடக்கும் திறமை இருந்தது.

ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோட்டாபய ராஜபக்சவை விட கடுமையான தீர்மானம் எடுப்பவர் என்பதை நாடு புரிந்துகொண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...