ஜனாதிபதி மாளிகையில் திருடப்பட்ட பொருட்களை விற்க முயன்ற மூன்று பேர் கைது!

Date:

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து திருடப்பட்ட பழங்காலத்து பொருட்கள் சிலவற்றை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூலை 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போது, சந்தேக நபர்கள் ஜன்னல் திரைகளை தொங்கவிடுவதற்காக சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த 40 தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை பாதங்களை திருடிச் சென்றதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூவரும் இராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தில் வசிக்கும் 28, 34 மற்றும் 37 வயதுடைய போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு  குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Popular

More like this
Related

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...