அனைத்து முச்சக்கரவண்டிகளும் பொலிஸ் நிலையத்தில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்: எரிசக்தி அமைச்சு!

Date:

எரிபொருள் விநியோகிக்கும் புதிய நடைமுறையின் கீழ், இந்த மாதம் முடிவடைவதற்கு முன்னர் அனைத்து முச்சக்கரவண்டிகளும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என எரிசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.

முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், தமக்கு அதிகாரத்திற்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு சென்று தமது முச்சக்கரவண்டிகளை பதிவு செய்துக்கொள்ளுமாறு அமைச்சர் காஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்படி, ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் உரிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

அத்துடன், வருமான வரி பத்திரத்தின் இலக்கத்திற்கு அமைய, எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறையொன்று எதிர்வரும் வெள்ளிகிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறுகின்றார்.

Popular

More like this
Related

அமெரிக்க – ஈரான் போர்: வளைகுடா நாடுகளுக்கு புதிய பாதுகாப்புச் சிந்தனை தேவை- தமிமுன் அன்சாரி

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு சேர்ந்து ஈரான் மீது...

600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 600 பொருட்களின் விலைகளைக் குறைத்து, அவற்றை...

IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை!

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பான மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்காக சர்வதேச நாணய...

சித்திரவதைக்குள்ளாகும் பலஸ்தீன மருத்துவர் அபு சபியா: இஸ்ரேலுக்கு ஐநா நிபுணர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை.

தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன மருத்துவர் டாக்டர் ஹுஸாம் அபு சஃபியா (Dr. Hussam...