மே 9 இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிக்கை!

Date:

கடந்த மே மாதம் (9) காலிமுகத்திடல் ‘கோட்டா கோ’ கிராமத்தின் மீது கடமை தவறிய பொலிஸ் மா அதிபர் உட்பட விசாரணை நடத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்த விசாரணைக்குப் பிறகு, சம்பவத்தில் தாக்கப்பட்டு காயமடைந்தவர்களை அடையாளம் கண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க பொலிஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனித ஆணையத்தின் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில், சம்பவ இடத்தில் கடமையாற்றிய பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களினால் கடமை மீறல் இடம்பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சம்பவத்தன்று குழுவினர் அளித்த வாக்குமூலங்களை முறையாக வெளியிடவில்லை என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட செயல்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் தவறிவிட்டனர் எனவும் குறிப்பிடப்படப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...