கம்பஹா நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ‘பஸ் பொட்டா’ உட்பட நால்வர் காயம்!

Date:

கம்பஹா நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக கோஷ்டி உறுப்பிரான சமன் ரோஹித பெரேரா என அழைக்கப்படும் ‘பஸ் பொட்டா’ உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு வேகன் ஆர் (வாகன மாடல்) ஒன்றில் வந்து ‘பஸ் பொட்டா’ வை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

துப்பாக்கிச் சூட்டின் காரணமாக மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்று இலங்கை பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

காரில் வந்த இனந்தெரியாத நபர்கள், நீதிமன்ற விசாரணையில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த ‘பஸ் பொட்டா’ மற்றும் பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதெவேளை ‘பஸ் பொட்டா’ ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...