‘மின்சார சபைக்கு மறுசீரமைப்பு தேவை’: எரிசக்தி அமைச்சர் காஞ்சன

Date:

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பு செய்ய வேண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மின்சார சபையின் மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்தை பிரிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், இலங்கை மின்சார சபை2014 முதல் புதிய பெரிய மின் உற்பத்தி நிலையங்கள் எதையும் தொடங்கவில்லை அல்லது இயக்கவில்லை.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியே முன்னோக்கி செல்லும் வழி என்றாலும், இதுபோன்ற திட்டங்களை எளிதாக்கும் அணுகுமுறை பற்றியும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின் கட்டண உயர்வு தேவை என்பதை ஒப்புக்கொண்ட அவர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செலவைக் குறைக்கும் திட்டத்துடன் இது தொடங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...