பாலியல் நோக்கத்துடனான வன்முறைகள் அவுஸ்திரேலியாவில் அதிகரிப்பு!

Date:

அவுஸ்திரேலியாவில் பாலியல் நோக்கத்துடனான தாக்குதல்கள் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளன என அவுஸ்திரேலிய புள்ளிவிபர பணியகம் தெரிவித்துள்ளது.

2021 இல் 31,000 பேர் பாலியல் நோக்கதுடனான தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் என பதிவாகியுள்ளது என புள்ளிவிபர பணியகம் தெரிவித்துள்ளது.

ஒரு வருடகாலப்பகுதியில் இத்தகைய குற்றங்கள் 13 வீதம் அதிகரித்துள்ளன, இத்தகைய குற்றங்கள் மாத்திரம் கடந்த வருடம் அதிகரித்துள்ளன.

பாலியல் நோக்கத்துடனான வன்முறைகளை எதிர்கொண்டவர்களில் 87 வீதமானவர்கள் அது குறித்து முறைப்பாடு செய்யவில்லை இதன் காரணமாக உண்மையான எண்ணிக்கை அதிகமாகயிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆண்கள் தங்கள் வாழ்க்கை துணையை தாக்குவது அதிகமாக காணப்படுகின்றது என பாலியல் வன்முறை தொடர்பான முன்னிலை பணியாளரான டாரா ஹன்டர் தெரிவித்துள்ளார்.

37 வீதமான சம்பவங்கள் வீடுகளில் இடம்பெற்றுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் தனிப்பட்ட உறவுகளின் சூழமைவின் அடிப்படையில் இவை இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...