பாலியல் நோக்கத்துடனான வன்முறைகள் அவுஸ்திரேலியாவில் அதிகரிப்பு!

Date:

அவுஸ்திரேலியாவில் பாலியல் நோக்கத்துடனான தாக்குதல்கள் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளன என அவுஸ்திரேலிய புள்ளிவிபர பணியகம் தெரிவித்துள்ளது.

2021 இல் 31,000 பேர் பாலியல் நோக்கதுடனான தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் என பதிவாகியுள்ளது என புள்ளிவிபர பணியகம் தெரிவித்துள்ளது.

ஒரு வருடகாலப்பகுதியில் இத்தகைய குற்றங்கள் 13 வீதம் அதிகரித்துள்ளன, இத்தகைய குற்றங்கள் மாத்திரம் கடந்த வருடம் அதிகரித்துள்ளன.

பாலியல் நோக்கத்துடனான வன்முறைகளை எதிர்கொண்டவர்களில் 87 வீதமானவர்கள் அது குறித்து முறைப்பாடு செய்யவில்லை இதன் காரணமாக உண்மையான எண்ணிக்கை அதிகமாகயிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆண்கள் தங்கள் வாழ்க்கை துணையை தாக்குவது அதிகமாக காணப்படுகின்றது என பாலியல் வன்முறை தொடர்பான முன்னிலை பணியாளரான டாரா ஹன்டர் தெரிவித்துள்ளார்.

37 வீதமான சம்பவங்கள் வீடுகளில் இடம்பெற்றுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் தனிப்பட்ட உறவுகளின் சூழமைவின் அடிப்படையில் இவை இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...