தேயிலைக் கொழுந்தின் விலை 100% அதிகரிப்பு!

Date:

தேயிலைக் கொழுந்தின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.

கடந்த மாதங்களில் ஒரு கிலோகிராம் தேயிலைக் கொழுந்தின் விலை 100 ரூபாவிற்கும் 130 ரூபாவிற்கும் இடையில் காணப்பட்டதாக சபையின் தலைவர் துஷார பிரியதர்ஷன குறிப்பிட்டார்.

எனினும், ஒரு கிலோ பச்சை தேயிலைக் கொழுந்தின் விலை தற்போது 260 ரூபாவை விட அதிகரித்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் கூறினார்.

டொலரின் பெறுமதி அதிகரித்ததன் பலன் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...