2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கை முதல் பதக்கத்தை வென்றது!

Date:

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் முதல் பதக்கமாக வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

55 எடைப்பிரிவில் பளுதூக்கும் போட்டியை பிரதிநிதித்துவப்படுத்திய இசுரு குமார இந்த பதக்கத்தை வென்றுள்ளார்.

இதில் மலேசியா தங்கப் பதக்கமும், இந்தியா வெள்ளிப் பதக்கமும் வென்றன.

இதேவேளை, 49 கிலோகிராம் பெண்களுக்கான எடைப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்திய ஸ்ரீமாலி சமரகோன், இன்று 8வது இடத்தை பிடித்தார்.

ஸ்ரீமாலி ஸ்னாட்ச் சுற்றில் 65 கிலோ எடையுடன் மொத்தம் 152 கிலோ எடையை அதிகபட்சமாக வெளிப்படுத்தினார்.

இலங்கை பூப்பந்து அணி நேற்றைய பூப்பந்து கலப்பு குழு போட்டியில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்து, ஜூலை 30 அன்று இந்திய அணியிடம் ஐந்து போட்டிகளிலும் தோல்வியடைந்தது.

ஆண்களுக்கான ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் மூன்றாவது போட்டியில் விளையாடிய இலங்கை ரக்பி அணி, இன்று சமோவாவிடம் 44-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது, அதே நேரத்தில் பெண்கள் அணியை 74-0 என்ற கணக்கில் கனடா தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...