நீர் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் நீர் விநியோகத்தை நிறுத்த நடவடிக்கை!

Date:

நீர் கட்டண நிலுவைத் தொகையை செலுத்தாத வாடிக்கையாளர்களின் நீர் விநியோகம் எதிர்காலத்தில் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

பெரும்பாலான வீட்டு நீர் பாவனையாளர்கள் இவ்வாறான நிலுவைகளை செலுத்தவில்லை என நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

நிலுவைத் தொகையை செலுத்தாத அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் தங்கியுள்ள குடியிருப்புகளுக்கான நீர் விநியோகத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நுகர்வோரிடமிருந்து ரூ. 7.5 பில்லியன் நீர் வழங்கல் சபைக்கு செலுத்தப்படவில்லை என்றும், ஒவ்வொரு ஆண்டும் 50,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டண பில்களை செலுத்தவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...