QR முறைமையில் 5 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன: எரிசக்தி அமைச்சர்

Date:

இதுவரை நாட்டில் ஐந்து மில்லியன் வாகனங்கள் தேசிய எரிபொருள் பாஸ் QR அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் இந்த விடயம் தெரிவித்துள்ளார்.

அமைப்புகளை செயல்படுத்த கடினமாக உழைத்த ICTA  உட்பட அனைத்து மேம்பாட்டு ஊழியர்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.

மேலும், இந்த அமைப்புகளை செயல்படுத்த கடின உழைப்புக்கு உழைத்த இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம் மற்றும் ஐ.ஓ.சி முறையை ஏற்றுக்கொண்டதற்காக மற்றும் பங்களித்த மற்ற அனைவருக்கும்’ என்று அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று   முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR முறைப்படி எரிபொருள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...