QR முறைமையில் 5 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன: எரிசக்தி அமைச்சர்

Date:

இதுவரை நாட்டில் ஐந்து மில்லியன் வாகனங்கள் தேசிய எரிபொருள் பாஸ் QR அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் இந்த விடயம் தெரிவித்துள்ளார்.

அமைப்புகளை செயல்படுத்த கடினமாக உழைத்த ICTA  உட்பட அனைத்து மேம்பாட்டு ஊழியர்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.

மேலும், இந்த அமைப்புகளை செயல்படுத்த கடின உழைப்புக்கு உழைத்த இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம் மற்றும் ஐ.ஓ.சி முறையை ஏற்றுக்கொண்டதற்காக மற்றும் பங்களித்த மற்ற அனைவருக்கும்’ என்று அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று   முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR முறைப்படி எரிபொருள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...