இலங்கையில் உள்ள தனியார் பேருந்து நடத்துனர்கள் ஆகஸ்ட் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
தனியார் பஸ் சங்கம் இன்று இந்த விடயத்தை (ஆகஸ்ட் 4) இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
QR குறியீட்டு முறையின் மூலம் ஒதுக்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு பேருந்துகளுக்குப் போதுமானதாக இல்லை என்றும், எனவே பணிகளை இடைநிறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் தனியார் பஸ் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.