ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீன தூதுவர் ‘Qi Zhenhong’ அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி டுவிட்டர் செய்தியில் இந்த சந்திப்பு பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, ஒரே சீனா கொள்கை மற்றும் நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு தொடர்பான ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் கோட்பாடுகளுக்கு இலங்கையின் உறுதியான உறுதிப்பாட்டை சீன தூதுவர் முன்னிலையில் மீண்டும் வலியுறுத்தியதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய உலகளாவிய பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் ஆத்திரமூட்டல்களில் இருந்து நாடுகள் விலகிக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பரஸ்பர மரியாதை மற்றும் நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாமை அமைதியான ஒத்துழைப்பு மற்றும் மோதலின்மைக்கு முக்கியமான அடித்தளங்கள் என்று அவர் மேலும் கூறுகிறார்.
During a meeting with H.E. Qi Zhenghong, Ambassador of China, I reiterated Sri Lanka's firm commitment to the one-China policy, as well as to the UN Charter principles of sovereignty and territorial integrity of nations. (1/2)
— Ranil Wickremesinghe (@RW_UNP) August 4, 2022