பெத்தும் கேர்னருக்கு பிணை:வெளிநாடு செல்வதற்கு தடை!

Date:

சமூக செயற்பாட்டாளரான பெத்தும் கேர்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், அவரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல இன்று (4) உத்தரவிட்டார்.

அத்துடன், அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும், கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக ஜூலை 28 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.

அண்மையில் பத்தரமுல்ல பொல்துவ மண்சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது அவரை இன்று (ஆகஸ்ட் 4) வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 9-12 மணிக்குள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் ஆஜராகுமாறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...