எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைப்பு

Date:

உள்நாட்டு எரிவாயு விலையை திங்கட்கிழமை (8) முதல் கணிசமான அளவு குறைப்பதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை குறைப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விற்பனை விலை அண்மையில் 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதுடன், தற்போதைய விலை 4,910 ரூபாவாகக் காணப்படுகின்றது.

மேலும் மக்கள் உணரும் வகையில் விலை குறைக்கப்படும், புதிதாக தயாரிக்கப்பட்ட புதிய விலைச் சூத்திரத்தினால் எரிவாயுவின் விலை குறைவடைந்துள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

இதேவேளை 20 நாட்களில் 22 இலட்சம்  எரிவாயு  சிலிண்டர்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக  கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...