பொருளாதார நெருக்கடிக்கு ஜப்பான் – தென்கொரியாவின் உதவிகள் இலங்கைக்கு தேவை: ஆசிய மன்றம்!

Date:

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், உதவ வேண்டுமென பொருளாதார ஒத்துழைப்புக்கான ஆசிய மன்றம் வலியுறுத்தியுள்ளது.

22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கையில், முன்னொருபோதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் பணவீக்கம் 60.8 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. மேலும் அந்நிய செலாவணி கையிருப்புக்கு மத்தியில் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளின் கடுமையான பற்றாக்குறையை நாடு எதிர்கொண்டுள்ளது.

தற்போது இலங்கை மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அவசர தேவை இருந்த போதிலும் சர்வதேச நாணய நிதியத்துடனான பிணை எடுப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள பல மாதங்கள் ஆகுமென ஆசிய மன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள், ஆசியாவின் இரண்டாவது மற்றும் நான்காவது பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகளாகும்.இந்த நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், விரைவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், அதன் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தவும் உதவுவது கட்டாயம் என்று ஆசிய மன்றம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின்...