இன்று நாடளாவிய ரீதியில் பல போராட்டங்கள்!

Date:

இன்று (09) தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மத்திய நிலையம் தீர்மானித்துள்ளது.

மக்கள் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, மக்கள் எதிர்பார்க்கும் சமூக மாற்றத்திற்கான சரியான வேலைத்திட்டத்தை முன்வைக்குமாறு ஜனாதிபதியை வலியுறத்துவது இதன் நோக்கமாகும் என அதன் இணை ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த போராட்டத்தை தடை செய்ய உத்தரவிடக் கோரிய கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று நிராகரித்திருந்தது.

அத்துடன், போராட்டத்தின் போது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டாலோ அல்லது சொத்து சேதம் ஏற்பட்டாலோ, அதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது என தலைமை நீதவான் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...