கோட்டபாய தொடர்பில் தாய்லாந்திடம் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கை!

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்திற்குள் நுழைவதற்கும் தற்காலிகமாக அங்கு தங்குவதற்கும் அனுமதிக்குமாறு, இலங்கை அரசாங்கம் அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் டானி சாங்ராட் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி அரசியல் தஞ்சம் கோரவில்லை எனவும் இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால மற்றும் சுமூகமான உறவுகளின் அடிப்படையில் இந்த பரிசீலனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் 2013ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி, வீசா இன்றி 90 நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவார் என டேனி சோங்ரட் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...