சீன கப்பலுக்கு இலங்கை கடல் எல்லைக்குள் வருவற்கு அனுமதி கிடைக்கவில்லை!

Date:

சீனாவின் ஆய்வுக்கப்பலான ‘யுவான் வாங் 5’ கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் வருவற்கு அனுமதிக்குமாறு இதுவரை அரச மேலிடத்தில் இருந்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை என இலங்கை துறைமுக அதிகார சபையின் துறைமுக அதிகாரி நிர்மல் சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கைக்கு வரும் திசையை மாற்றிக்கொண்டு குறித்த கப்பல் வேறு திசை நோக்கி பயணிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் ஒருசில சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், இலங்கையில் இருந்து 650 கடல் மைல் தொலைவில் ‘யுவான் வாங் 5’ கப்பல் மெதுவாக இலங்கையை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளதாக தொடர்ச்சியாக இந்திய செய்தி நிறுவனங்கள் தகவல்களை வெளியிட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...